சேலம் | கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த சரக்கு வாகனம் - முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு

வாழப்பாடி அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு
முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்புpt desk
Published on

செய்தியாளர்: ஆர்.ரவி

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள அனுப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் துரைசாமி. முன்னாள் ராணுவ வீரரான இவர், வெள்ளாளப்பட்டியில் இருந்து வாழப்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம், சாலையை கடக்க முயன்றவர் மீது மோதாமல் இருக்க வாகனத்தை திருப்பியுள்ளார். அப்போது துரைசாமி சென்ற இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது

கடைக்குள் புகுந்த சரக்கு வாகனம்
கடைக்குள் புகுந்த சரக்கு வாகனம்pt desk

இதையடுத்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் சாலையோரத்தில் இருந்த மளிகை கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற துரைசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து ஏற்படுத்திய சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் தப்பியோடினார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வாழப்பாடி போலீசார் துரைசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு
சென்னை: சீரமைக்கப்படாத சாலைகள்... சிக்கித் திணறும் வாகன ஓட்டிகள் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி போலீசார் விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய சரக்கு வாகனத்தின் ஓட்டுநரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com