போலீஸ் போல் நடித்து 10 லட்சம் கொள்ளை

போலீஸ் போல் நடித்து 10 லட்சம் கொள்ளை
போலீஸ் போல் நடித்து 10 லட்சம் கொள்ளை
Published on

 விக்கிரவாண்டியில் காவல் துறையினர் போல் நடித்து 10 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த 6 பேர் வால்பாறையில் கைது செய்யப்பட்டனர். 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் கடந்த 13 ம் தேதி வங்கியில் இருந்து ஒருவர் பத்து லட்சம் ரூபாயை காரில் எடுத்து சென்றுள்ளார். அப்போது சுங்கச்சாவடி அருகில் காவல்துறை அதிகாரிகள் போல் வேடம் அணிந்த 8 நபர்கள் காரை சோதனை செய்து ரூபாய் பத்து லட்சத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.

இதுதொடர்பாக விக்கிரவாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக 2 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட6 பேர் வால்பாறை பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து விக்கிரவாண்டி காவலர்கள் ஏற்கனவே கைது செய்த 2 கொள்ளயர்களை  அழைத்துக்கொண்டு வால்பாறைக்கு விரைந்தனர்.

இந்நிலையில் வால்பாறை அருகே சோலையார் அணை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கொள்ளையர்கள் தங்கி இருந்தது தெரிய வந்தது.இதை தொடர்ந்து அங்கு விரைந்த காவலர்கள்,அங்கு பதுங்கி இருந்த 6 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com