ஆர்.கே.நகர் வாக்குப்பதிவை நேரலையாக ஒளி‌பரப்பக் கோரி மருது கணேஷ் மனு

ஆர்.கே.நகர் வாக்குப்பதிவை நேரலையாக ஒளி‌பரப்பக் கோரி மருது கணேஷ் மனு
ஆர்.கே.நகர் வாக்குப்பதிவை நேரலையாக ஒளி‌பரப்பக் கோரி மருது கணேஷ் மனு
Published on

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவை நேரலையாக ஒளி‌பரப்பக் கோரி திமுக வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்து மையங்களிலும் நடைபெறும் வாக்குப்பதிவை நேரடியாக ஒளிபரப்பக் கோரி திமுக வேட்பாளர் மருது கணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மருது கணேஷ் சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், மனுவை தாக்கல் செய்தார். ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா, வாக்குவாதம், வாக்குச்சாவடியைக்‌ கைப்பற்றுதல் போன்றவற்றிக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வருவதாகவும், இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் திமுகவின் மனுவில் கூறப்பட்டுள்ளது. தேர்தலை நேர்மையாக நடத்த கூடுதலாக துணை ராணுவ வீரர்களை பணியமர்த்த வேண்டும் என்றும், வீதிகள்தோறும் 4 கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்றும் கடந்த 5ஆம் தேதி அளிக்கப்பட்ட மனுவில், தேர்தல் ஆணையம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கறிஞர் வில்சன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த மனு வரும் 18ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com