எழுவர் விடுதலை.. இன்று மாலை அனுப்பப்படுகிறது பரிந்துரை கடிதம்

எழுவர் விடுதலை.. இன்று மாலை அனுப்பப்படுகிறது பரிந்துரை கடிதம்
எழுவர் விடுதலை.. இன்று மாலை அனுப்பப்படுகிறது பரிந்துரை கடிதம்
Published on

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலைக்கு வகை செய்யும் அமைச்சரவையின் பரிந்துரை, இன்று மாலைக்குள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் தமிழக ஆளுநர் முடிவெடுக்கலாம் என கடந்த 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாலை முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் இந்திய அரசமைப்புச் சட்டம் 161-ன் கீழ் 7 பேரையும் முன்விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வது என அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி எழுவர் விடுதலை தொடர்பான அரசின் பரிந்துரையானது இன்று மாலைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com