பள்ளிக்கு வண்ணம்‌ தீட்டிக் கொடுத்த ரஜினி ரசிகர்கள்

பள்ளிக்கு வண்ணம்‌ தீட்டிக் கொடுத்த ரஜினி ரசிகர்கள்
பள்ளிக்கு வண்ணம்‌ தீட்டிக் கொடுத்த ரஜினி ரசிகர்கள்
Published on

நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளிக்கு ரஜினி ரசிகர்கள் ரயில் பெட்டிகள்போல வண்ணம் தீட்டி கொடுத்துள்ளனர்.

மேலப்பாளையம் குறிச்சியில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை குறைவாகி இருந்த நிலையில் ஆசிரியர்களின் தன்னார்வ முயற்சியால் தற்போது 70-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.‌

இந்நிலையில் பள்ளிக்கு மேலும் மாணவர்களை ஈர்க்கும் வகையிலும், ஏற்‌கெனவே படிக்கும் மாண‌வர்களைக் கவரும் ‌வகையிலும் ரஜினி ரசிகர்கள் சார்பில் பள்ளிக்கு வண்ணம் தீட்டிக் கொடுத்துள்ளனர். வகுப்பறைச் சுவர்களுக்கு ரயில் பெட்டிகள் போன்றும், சுற்றுச்சுவர்களில் அரண்மனை ‌கோயில் கோட்டைச் சுவர் போலவும் வண்ணம் தீட்டிக் கொடுத்துள்ளனர்.

மேலும் மாணவர்களிடையே சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையிலான ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன. நேற்று ரஜினிகாந்த் மாவட்டச் செயலாளர்களுடன் அரசியல் செயல்பாடுகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com