புதுக்கோட்டை: சிக்கன் ரோல் சாப்பிட்ட 5 பேருக்கு உடல்நலக் குறைவு... என்ன நடந்தது?

புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் உள்ள சவர்மா கடையில் கெட்டுப்போன சிக்கன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கெட்டுப்போன சிக்கனால் ஐவருக்கு உடல்நல பாதிப்பு
கெட்டுப்போன சிக்கனால் ஐவருக்கு உடல்நல பாதிப்புபுதிய தலைமுறை
Published on

செய்தியாளர்: சுப. முத்துப்பழம்பதி

புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் உள்ள சவர்மா கடையில் சிக்கன் ரோல் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரவீன் குமார் சம்பந்தப்பட்ட சவர்மா கடையில் அதிரடியாக சோதனை நடத்தினார். அப்போது அக்கடையில் கெட்டுப்போன சிக்கன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் பெரியார் நகரை சேர்ந்த யூசுப் என்பவர் நான்கு ஆண்டுகளாக சவர்மா கார்னர் என்ற பெயரில் சவர்மா கடை நடத்தி வருகிறார். அந்தக் கடையில் நேற்று இரவு சிக்கன் ரோல் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம் (49), அவரது மனைவி சர்மிளா பானு (40), இவர்களின் மகன்கள் அப்துல் ரகுமான் (7), முகமது அஸ்லாம் (15), மகள் சுமையா ரிஸ்வானா (18) ஆகிய 5 பேருக்கு வாந்தி வயிற்றுவலி வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்கள் ஐந்து பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கெட்டுப்போன சிக்கனால் ஐவருக்கு உடல்நல பாதிப்பு
ரெட் அலர்ட்! ’தயாரா சென்னை மக்களே?’ யாருக்கெல்லாம் விடுமுறை.. முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட சவர்மா கடையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரவீன் குமார் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரை அந்த கடைக்கு வரவழைத்து காவல்துறையினரின் பாதுகாப்போடு சோதனை மேற்கொண்டார். அப்போது அந்த கடையில் கெட்டுப்போன 5 கிலோ சிக்கன் இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரவீன் குமார், அந்த சிக்கனை பினாயில் ஊற்றி அளித்துவிட்டு உடனடியாக அந்த கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.

கெட்டுப்போன சிக்கன்
கெட்டுப்போன சிக்கன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரவீன் குமார், “சவர்மாவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதித்து வாய்மொழி உத்தரவு வழங்கி உள்ளோம். அதனை மீறி சவர்மா செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சவர்மா கடை நடத்த வேண்டும் என்றால் அதற்கென்று உரிய முறையில் உணவு தயாரிக்க தெரிந்தவர்தான் அதனை செய்ய வேண்டும். அவ்வாறு செய்ய தெரிந்தாலும் உரிய அனுமதி பெற்ற பின்னர்தான் அந்த கடையை நடத்த வேண்டும்.

தற்போது பாதிக்கப்பட்டவர்கள் சிக்கன் ரோல் சாப்பிட்டதால்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் அவர்கள் சாப்பிட்ட உணவால் பாதிப்பு என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். ஆய்வுக்கு பின்னர்தான் அது தெரியவரும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com