புதிய தலைமுறை மீதான வழக்கை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்

புதிய தலைமுறை மீதான வழக்கை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்
புதிய தலைமுறை மீதான வழக்கை கண்டித்து புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம்
Published on

புதிய தலைமுறை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்து புதுச்சேரி செய்தியாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கோவையில் நடந்த வட்டமேசை விவாத நிகழ்ச்சி தொடர்பாக புதிய தலைமுறை செய்தியாளர் மற்றும் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பத்திரிகையாளர் சங்கத்தினர், அரசியல் தலைவர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தங்களது கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரி தலைமை அஞ்சலகம் அருகே புதுச்சேரி செய்தியாளர் சங்கம், மற்றும் அனைத்து சமூக ஜனநாயக இயக்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சிவா, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொது செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். புதிய தலைமுறை மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வலியுறுத்தி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதில் சிறுவர், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com