112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
112 அடி உயர ஆதியோகி சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
Published on

கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ‌அமைக்கப்ப‌ட்டுள்ள 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் மோடி நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் 112 அடி உயர ஆதியோகி சிவன் சிலையை ஈஷா யோகா நிறுவனம் அமைத்துள்ளது. இதனை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் கோவை வந்தார். அங்கு, பிரதமரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வரவேற்றனர்.

பின்னர் ஹெலிகாப்டர் மூலம் ஈஷா யோகா மையம் சென்ற பிரதமரை, ஜக்கி வாசுதேவ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் அங்கு அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயரமுள்ள ஆதியோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, மத்திய, தமிழக அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com