பிரதமர் எதைச் செய்தாலும் விமர்சிக்கிறார்கள்: தமிழிசை

பிரதமர் எதைச் செய்தாலும் விமர்சிக்கிறார்கள்: தமிழிசை
பிரதமர் எதைச் செய்தாலும் விமர்சிக்கிறார்கள்: தமிழிசை
Published on

பிரதமர் எதை செய்தாலும் விமர்சனம் செய்வதற்கு சிலர் இருக்கின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி ஈஷா மைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, பெரும்பான்மையான மக்க‌ள‌் கொண்டாடும் நிகழ்ச்சி என்‌பதாலேயே ஈஷா நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொள்வத‌ாக தெரிவித்தார். பிரதமர் எதைச் செய்தாலும் விமர்சனம் செய்வதற்கு சிலர் இருக்கின்றனர் என்றும், ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வர திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள்தான் காரணம் என கூறிய தமிழிசை, இப்போது பா.ஜ.க வை குற்றம்சாட்டுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com