பொங்கல் பண்டிகை: தருமபுரி வாரச் சந்தையில் ஒரே நாளில் ரூ. 6.5 கோடிக்கு விற்பனையான ஆடுகள்

பொங்கல் பண்டிகை: தருமபுரி வாரச் சந்தையில் ஒரே நாளில் ரூ. 6.5 கோடிக்கு விற்பனையான ஆடுகள்
பொங்கல் பண்டிகை: தருமபுரி வாரச் சந்தையில் ஒரே நாளில் ரூ. 6.5 கோடிக்கு விற்பனையான ஆடுகள்
Published on

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம், நல்லம்பள்ளி வாரச் சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி இறைச்சிக்காக சுமார் 6.50 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது.

தருமபுரி மாவட்டத்தில் இன்று நல்லம்பள்ளி வாரச்சந்தை நடைபெற்றது. இந்த சந்தையில் விவசாயிகள் தாங்கள் வளர்த்து வந்த ஆடுகளை பொங்கல் பண்டிகைக்காக விற்பனைக்கு கொண்டு வந்தனர். தருமபுரி, மாரண்டஹள்ளி, பாலக்கோடு, தொப்பூர், மிட்டாரெட்டிஹள்ளி. மற்றும் சேலம் மாவட்டம் மேச்சேரி, மேட்டூர் ஆகிய பகுதிகளிலிருந்தும் சந்தைக்கு சுமார் 3500 ஆடுகள் விற்பனைக்கு வந்தது.


காணும் பொங்கல தினத்தில் இறைச்சிக்காக ஆடுகளை வாங்க இன்று அதிகாலை முதலே பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் சந்தையில் குவிந்தனர். நல்லம்பள்ளி வாரச் சந்தையில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தது. இன்றைய சந்தை முழுவதும் மக்கள் கூட்டம் அலைமோதியது. நல்லம்பள்ளி சந்தையில் குறைந்த விலையாக ஒரு ஆடு 10 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 30 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.


சென்ற வாரத்தை விட இந்த வாரம் ஆடுகளின் விலை சுமார் 2000 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது. ஆடு விலை உயர்வு விவசாயிகளுக்கு லாபம் கிடைத்ததாக ஆடு வளர்க்கும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இன்றைய நல்லம்பள்ளி வாரச் சந்தையில் 3.50 கோடிக்கும், காரிமங்கலம் வாரச்சந்தையில் 3000 ஆடுகள், சுமார் 3 கோடி ரூபாய் என மொத்தம் 6.50 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com