பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
Published on

தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை, ஆண்டுதோறும் தை மாதத்தின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் உயிர்கள் வாழ ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, புதுப்பானையில், புத்தரிசிப் பொங்கலிட்டு இப்பண்டிகையை மகிழ்ச்சி பொங்க கொண்டாடி வருகின்றனர்.

வீடுகள் முன் அலங்காரத் தோரணங்களைக் கட்டி, வண்ண நிறங்களில் கோலமிட்ட மக்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக வரவேற்றனர். புத்தாடை உடுத்தி‌, மதம், இன பேதமின்றி உறவினர்கள், நண்பர்களுக்கு வாழ்த்துகள் பரிமாறி மகிழ்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com