கனியாமூர் பள்ளியில் வெடிமருந்தா? - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீசார்

கனியாமூர் பள்ளியில் வெடிமருந்தா? - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீசார்

கனியாமூர் பள்ளியில் வெடிமருந்தா? - வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த போலீசார்
Published on

கனியாமூர் பள்ளியில் கண்டு எடுக்கப்பட்டது கருஞ்சீரகம் என காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் இன்று வெடி மருந்து இருந்ததாக வதந்தி பரவிய நிலையில், அது சமையலுக்கு பயன்படுத்தப்படும் கருஞ்சீரகம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கனியாமூர் தனியார் பள்ளியை தற்போது தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் விடுதியின் சமையலறை பகுதியில் கருஞ்சீரகம் பொட்டலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதைக் கண்டவர்கள் பள்ளி நிர்வாகத்தில் இருந்த சிலரிடம் தெரிவித்தபோது, அதன் உண்மை நிலையை தெரியாத பள்ளி நிர்வாக தரப்பினர் அது வெடி மருந்து என கருதி அதை உடனடியாக போட்டோ எடுத்து தேவையில்லாமல் சமூக வலைதளங்களில் பரப்பி விட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவம் பரபரப்பானதைத் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உடனடியாக கனியாமூர் தனியார் பள்ளிக்கு வந்து ஆய்வு பணியை மேற்கொண்டனர். அப்போது கண்டெடுக்கப்பட்ட அந்த பொருள் சமையலுக்கு பயன்படுத்தப்படும் கருஞ்சீரகம் என உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com