சென்னையில் சாலையோரம் கிடந்த 2 மாத ஆண் குழந்தை - காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்

சென்னையில் சாலையோரம் கிடந்த 2 மாத ஆண் குழந்தை - காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்
சென்னையில் சாலையோரம் கிடந்த 2 மாத ஆண் குழந்தை - காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்
Published on

(கோப்பு புகைப்படம்)

சென்னையில் சாலையோரம் கிடந்த 2 மாத ஆண் குழந்தையை காவல்துறையினர் மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை அடையாறு பத்மநாபன் நகரின் சாலையோரத்தில் துணியில் சுற்றியபடி ஆண் குழந்தை ஒன்று கிடப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அங்கு சென்ற சாஸ்திரி நகர் காவல்துறையினர் 2 மாத ஆண் குழந்தையை கண்டெடுத்தனர்.

(கோப்பு புகைப்படம்)

தொடர்ந்து குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் அண்ணா நகரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், குழந்தையை வீசி சென்றவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com