முன்பதிவு செய்தும் 350 கி.மீ. நின்றுக்கொண்டே பயணித்த குடும்பம் ! போக்குவரத்து துறைக்கு அபராதம்..!

முன்பதிவு செய்தும் 350 கி.மீ. நின்றுக்கொண்டே பயணித்த குடும்பம் ! போக்குவரத்து துறைக்கு அபராதம்..!
முன்பதிவு செய்தும் 350 கி.மீ. நின்றுக்கொண்டே பயணித்த குடும்பம் ! போக்குவரத்து துறைக்கு அபராதம்..!
Published on

பேருந்தில் முன்பதிவு மூலம் கட்டணம் வசூலித்துவிட்டு, இருக்கை கொடுக்காமல் 350 கி.மீ தூரம் பயணிகளை நின்ற நிலையில் பயணிக்க வைத்த தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை போரூரை சேர்ந்தவர் அப்துல் அஜீஸ். இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் வேதாரண்யம் செல்வதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்தில் முன்பதிவு செய்துள்ளார். மொத்தமாக 8 இருக்கைளை அவர் முன்பதிவு செய்துள்ளார். இருக்கை எண் 37,38,39,40,41,42,43 மற்றும் 44 ஆகிய எண் கொண்ட இருக்கைகள் அவருக்கு ஒதுக்கப்பட்டு மொத்தமாக 1155 ரூபாய் வசூலிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பேருந்தில் ஏறியபோது, பேருந்தில் மொத்தமாக 40 இருக்கைகள் மட்டுமே இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அப்துல் அஜீஸ் பேருந்து நடத்துநரிடம் முறையிட்டபோது, அவரும் சீட் இல்லை என்ற பதிலையே கூறியுள்ளார். இதனையடுத்து வேறு வழியில்லாமல் 350 கி.மீ தூரம் நின்ற நிலையிலேயே அப்துல் அஜீஸ் குடும்பத்தினர் பயணம் செய்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அப்துல் அஜீஸ், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ரூபாய் 2 லட்சம் இழப்பீடு கோரியும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை நுகர்வோர் குறைதீர் மன்றம், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.36,203 அபராதம் வழங்கி உத்தரவிட்டார். மேலும் தொகையை பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்துடன் திருப்பி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com