ஃபேஸ்புக்கில் ஆபாசம்: அமெரிக்காவில் வசிப்பவர் மீது பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு

ஃபேஸ்புக்கில் ஆபாசம்: அமெரிக்காவில் வசிப்பவர் மீது பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு
ஃபேஸ்புக்கில் ஆபாசம்: அமெரிக்காவில் வசிப்பவர் மீது பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு
Published on

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர் மீது பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் மாணிக்கம். இவர் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியரான சகாயம் மீது பரமக்குடி போலீசாரில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் முகநூலில் தனது மனைவியை சகாயம் ஆபாசமான வார்த்தைகளால் அவதூறாக விமர்சிப்பதாகவும், அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தார். அதன்பேரில் சகாயம் மீது பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதுதவிர சகாயத்தின் தூண்டுதலின் பேரில் மாணிக்கத்தை கொலைச் செய்ய முயற்சித்த அதே பகுதியைச் சேர்ந்த கார்திக்பாண்டி, சந்திரசேகர் மற்றும் முருகேச பாண்டி ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com