பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டம் ? - இந்திய ராணுவம் தகவல்

பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டம் ? - இந்திய ராணுவம் தகவல்

பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டம் ? - இந்திய ராணுவம் தகவல்
Published on

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டதிலிருந்து, இந்திய எல்லையில் பாகிஸ்தான் ஊடுரு முயற்சிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீரின் பூஞ்ச் உள்ளிட்ட பகுதியில் அத்துமீறல் சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது. அத்துடன் பயங்கரவாத ஆதரவாளர்களை தூண்டிவிட்டு எல்லைப்பகுதியில் அமைதியை சீர்குலைக்கலாம் எனவும் பாகிஸ்தான் திட்டமிட்டது. ஆனால் பாகிஸ்தானை ஊடுருவ முடியாத வகையில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. 

இருப்பினும் எல்லையில் தொடர்ந்து அத்துமீறினால், இந்திய ராணுவம் நடத்தும் பதில் தாக்குதலை ஐநா சபையில் குறிப்பிட்டு பேசலாம் எனவும் பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது. ஆனால் இந்திய ராணுவம் சாதுர்யமாக செயல்பட்டு, பாகிஸ்தான் அத்துமீறுவதை வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. இனிமேலும் பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்கும் என கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com