சென்னை: நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி விபத்து - ஒருவர் மரணம்!

நடிகை ரேகா நாயருக்கு சொந்தமான கார் மோதி 55 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழப்பு. டிரைவரை கைது செய்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ரேகா நாயர் கார் மோதி விபத்து
ரேகா நாயர் கார் மோதி விபத்துFile image
Published on

ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் மஞ்சன் (55). இவர் மது போதையில் ஜாபர்கான்பேட்டை பச்சையப்பன் தெரு பகுதியில் படுத்துக் கிடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார், மஞ்சன் மீது மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மஞ்சன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Arrested
Arrestedfile

இந்த விபத்து தொடர்பாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், கார் எண்ணை வைத்து கார் ஓட்டுநர் எம்ஜிஆர் நகரை சேர்ந்த பாண்டி (25) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கைது செய்யப்பட்ட பாண்டி நடிகை ரேகா நாயரின் கார் ஓட்டுநர் என்பதும், நடிகை ரேகா நாயரின் பெயரில்தான் இந்த கார் இருந்ததும் தெரியவந்துள்ளது.

ரேகா நாயர் கார் மோதி விபத்து
“பெண்களுக்கு எதிரான ஆபாச பரப்புரைகளை ஏற்க முடியாது” - SP வந்திதா பாண்டேவிற்கு ஆதரவாக கனிமொழி MP!

இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பாண்டியிடம் கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை எற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com