விருதுநகர்: பட்டாசு ஆலை வெடி விபத்து – ஆட்டோ ஓட்டுனர் உயிரிழப்பு

வெம்பக்கோட்டை அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் ஒருவர் படுகாயமடைந்தார்.
பட்டாசு ஆலை வெடி விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்துpt desk
Published on

செய்தியாளர்: A.மணிகண்டன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை குகன்பாறை செவல்பட்டி பகுதியில் சிவகாசியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான நாக்பூர் உரிமம் பெற்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 20க்கும் மேற்பட்ட அறைகளில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பட்டாசு ஆலை வெடி விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்துpt desk

இந்நிலையில், இன்று காலை பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் அறையில் திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி (19) என்பவர் ஈடுபட்டிருந்தார். அப்போது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வெடி மருந்துகளை கொண்டு வந்த செவல்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கோவிந்தராஜ் (24) உயிரிழந்தார். மேலும் 70 சதவீதம் தீக்காயமடைந்த குருமூர்த்தி சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பட்டாசு ஆலை வெடி விபத்து
திருப்பூர்: ஒரு அமரர் ஊர்தியில் இரு உடல்கள்.. அரசு சேவையில் அவலம்.. நீதி கேட்கும் தந்தை!

இந்த விபத்து குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com