நிவர் புயல் எச்சரிக்கை: 7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு

நிவர் புயல் எச்சரிக்கை: 7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு
நிவர் புயல் எச்சரிக்கை: 7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என அறிவிப்பு
Published on

நிவர் புயலின் தாக்கத்தை சந்திக்கவுள்ள 7 மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஏற்கெனவே நிவர் புயலின் தாக்கத்தை சந்திக்கவுள்ள 7 மாவட்டங்களுக்கு இன்று மதியம் 1 மணிமுதல் அரசுப் பேருந்துகள் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுவதாக முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுருந்தார். அதன்படி இந்த 7 மாவட்டங்கள் வழியாக செல்லும் பிற மாவட்டங்களுக்கும் பேருந்துகள் நிறுத்தம் செய்யப்படுகின்றன. விழுப்புரம் வழியாக செல்லும் திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாக்குமரிக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com