எங்கய்யா வச்சிருக்கீங்க இன்னும்? பழைய நோட்டுகள் மீண்டும் பறிமுதல்!

எங்கய்யா வச்சிருக்கீங்க இன்னும்? பழைய நோட்டுகள் மீண்டும் பறிமுதல்!
எங்கய்யா வச்சிருக்கீங்க இன்னும்? பழைய நோட்டுகள் மீண்டும் பறிமுதல்!
Published on

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 90 லட்ச ரூபாய், பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடிய கோவை கோத்தனூரை சேர்ந்த முகமது ரிஷாத், சுபையர் ஆகியோரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற சென்னை வந்துள்ள இவர்கள், அதனை மாற்ற முடியாமல் கோவைக்கு திரும்ப முடிவுசெய்தபோது போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இவர்களிடம் இருந்து பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரும் யாருடைய பணத்தை சென்னையில் மாற்ற வந்தனர் என்பது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். கடந்த 18 ஆம் தேதி சென்னை கோடம்பாக்கத்தில் 46 கோடி ரூபாய் பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது கோயம்பேட்டிலும் பழையை ரூபாய் நோட்டுகள் சிக்கியிருக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com