கள்ளக்குறிச்சி மாணவி மரணம் திமுக ஆட்சியின் மதிப்பீட்டிற்கு எடுத்துக்காட்டு: ஓ.எஸ்.மணியன்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் திமுக ஆட்சியின் மதிப்பீட்டிற்கு எடுத்துக்காட்டு: ஓ.எஸ்.மணியன்
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் திமுக ஆட்சியின் மதிப்பீட்டிற்கு எடுத்துக்காட்டு: ஓ.எஸ்.மணியன்
Published on

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் திமுக ஆட்சியின் மதிப்பீட்டிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் பகுதியில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் மற்றும் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய ஓ.எஸ்.மணியன், "மக்களுக்கு கொடுக்கப்பட்ட சலுகையை எப்படி ரத்துசெய்வது, ஒடுக்குவது என்று யோசிக்கும் அரசாக திமுக உள்ளது. ஒரேநாடு ஓரேதேர்தல் நடைமுறைக்கு வரும் என்பதால் 2024 தேர்தலுக்கு தயாராக இருக்க வேண்டும்.

தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன்னிலையில் திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சியில் இருந்து விலகி தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஒ.எஸ்மணியன் பேசும்போது...

சசிகலா அதிமுகவிற்கு பொதுச் செயலாளர் என்று கூறும் நிலையில், அது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி போது... அந்தக் கேள்விக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. அதற்கு பதில் கூற நீண்ட நேரம் ஆகும். திமுக அரசு சென்ற ஆண்டு முதல் தற்போது வரை குறுவை பயிர் காப்பீடு திட்டத்தை அறிவிக்கவில்லை. தொடர்ந்து யூரியா தட்டுப்பாடு என்பதை விட இல்லை என்ற நிலையே இருக்கிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் திமுக ஆட்சியின் மதிப்பீடிற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. போதை பொருளின் சந்தை தமிழ்நாடு என்று கூறும் அளவிற்கு அனைத்து பகுதிகளிலும் தட்டுப்பாடு இன்றி எளிதாக போதை பொருள் கிடைக்கக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.

கூட்டு பாலியல் வன்கொடுமை மோசமாக நடந்து கொண்டிருக்கிறது. காவல் துறையை பார்த்து அச்சப்படுகிற நிலை தமிழகத்தில் இல்லையோ என அஞ்சுகிற சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com