சவக்கிடங்கிற்கு மின்சாரம் துண்டிப்பு: நோய்த் தொற்று ஏற்படும் அபாயம்

சவக்கிடங்கிற்கு மின்சாரம் துண்டிப்பு: நோய்த் தொற்று ஏற்படும் அபாயம்
சவக்கிடங்கிற்கு மின்சாரம் துண்டிப்பு: நோய்த் தொற்று ஏற்படும் அபாயம்
Published on

திருத்தணி அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் 20 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் துர்நாற்றம் வீசி வருவதாக நோயாளிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கில் கடந்த 20 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பிணவறையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக நோயாளிகள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த 20 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் செடிகளை இயந்திரம் கொண்டு அகற்றும்போது மின் வயர்கள் துண்டிக்கப்பட்டன. அதனால் சவக்கிடங்கிற்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை.

சவக்கிடங்கிலிருந்து துர்நாற்றம் வீசும் நிலையில், அருகே மகப்பேறு பிரிவு இருப்பதால், பச்சிளம் குழந்தைகளுக்கு நோய் பரவும் நிலை இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். எனவே, உடனடியாக சவக்கிடங்கிற்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com