தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - இரக்கமற்ற தாய்க்கு வலைவீச்சு

தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - இரக்கமற்ற தாய்க்கு வலைவீச்சு
தூக்கி வீசப்பட்ட பச்சிளம் குழந்தை - இரக்கமற்ற தாய்க்கு வலைவீச்சு
Published on

உதகை தாவரவியல் பூங்காவில், பிறந்து இரண்டு மணிநேரமே ஆன பச்சிளம் குழந்தையை தூக்கி வீசிவிட்டுச் சென்ற தாயை போலீசார் தேடி வருகின்றனர். 

நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள ஒரு புதரில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அப்பகுதியில் நடமாடிய பெண்கள் புதருக்குள் சென்றபோது, பச்சிளம் குழந்தையை யாரோ வீசி சென்றிருப்பது தெரியவந்தது. உடனே அவர்கள் பூங்கா அதிகாரி மற்றும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த உதகை அரசு மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று முதலுதவி செய்தனர். 

பின்னர் வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து, பூங்கா சாலையிலுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். பெரும்பாலான கேமராக்கள் வேலை செய்யாததால் குழந்தையை யார் வீசி சென்றார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. சர்வதேச சுற்றுலா தளம் என்பதால், யார் யார் வந்து சென்றனர் எனவும் கண்டறிய முடியாத நிலையில் காவல்துறையினர் உள்ளனர். இருப்பினும் குழந்தையை வீசிச்சென்ற தாயை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com