கரூர்: அங்கன்வாடியில் பிழைகளுடன் எழுதப்பட்ட பெயர்கள்.. புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக மாற்றம்

கரூர் அருகே அங்கன்வாடியில் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்த தேசத் தலைவர்களின் பெயர்கள், புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக திருத்தி எழுதப்பட்டுள்ளன.
பிழைகளுடன் எழுதப்பட்ட பெயர்கள்
பிழைகளுடன் எழுதப்பட்ட பெயர்கள்pt web
Published on

கரூர் அருகே அங்கன்வாடியில் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்த தேசத் தலைவர்களின் பெயர்கள், புதிய தலைமுறை செய்தி எதிரொலியாக திருத்தி எழுதப்பட்டுள்ளன.

குளித்தலை அருகே கீழகுட்டப்பட்டியில் சுமார் 12 கோடி ரூபாயில், அங்கன்வாடி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, திறக்கப்பட்டது. அங்கு எழுதப்பட்ட தேசத் தலைவர்கள், பழங்கள், மாதங்களின் பெயர்கள் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்தன. இதுகுறித்து புதிய தலைமுறை செய்தி வெளியிட்டது. இரு தினங்களுக்கு முன்பு வெளியான அந்த செய்தியை இங்கே காணலாம்:

இதைத்தொடர்ந்து தற்போது பெயர்கள் திருத்தி எழுதப்பட்டுள்ளன. முன்னதாக அங்கன்வாடி கட்டடத்தில் தேசத் தலைவர்களின் படங்களையும், காய்கறிகளின் படங்களையும் வரைந்திருந்தனர். ஆனால், அவற்றின் பெயர்களை பிழைகளுடன் எழுதியிருந்த நிலையில், தற்போது திருத்தப்பட்டுள்ளன. திருத்தப்பட்ட பின்னான காணொளியை இங்கே காணலாம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com