சிறையில் நளினி தற்கொலை முயற்சி?

சிறையில் நளினி தற்கொலை முயற்சி?
சிறையில் நளினி தற்கொலை முயற்சி?
Published on

சிறையில் உள்ள நளினி தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 28-ஆண்டுகளுக்கும் மேலாக தொரப்பாடியில் உள்ள வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ளார் நளினி. இந்நிலையில் சக கைதியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனால் நளினி தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள வழக்கறிஞர் புகழேந்தி, சக கைதியுடன் நளினி வாக்கவாதத்தில் ஈடுபட்டதாகவும் அப்போது சிறை காவலர் ஒருவர் தலையிட்டதால் தான் தற்கொலை செய்து கொள்வதாக நளினி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்கள் தனிச்சிறையில் உள்ள தனது மனைவி நளினியை விரைவாக புழல் சிறைக்க மாற்ற ஏற்பாடு செய்யும்படி ஆண்கள் மத்திய சிறையில் உள்ள முருகன் தன்னை கேட்டுக்கொண்டதாகவும் வழக்கறிஞர் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com