கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது

கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது
கொள்ளையன் நாதுராமின் மனைவி கைது
Published on

காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கொள்ளையன் நாதுராமின் மனைவி மஞ்சு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோத்பூர் மாவட்டம் மாலாவாத்தில் உள்ள சகோதரர் வீட்டில் மஞ்சு பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை பாலி மாவட்ட எஸ்.பி. தீபக் பார்கவ் புதிய தலைமுறைக்கு கூறினார். காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக மற்றொரு ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போது முனிசேகர் தவறுதலாக சுட்டத்தில் பெரியபாண்டியன் உயிரிழந்துவிட்டதாக பாலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் பார்கவ் கூறியிருந்த நிலையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com