“இவங்க உருட்டு இருக்கே; ஒரு லட்டுக்காக பெருமாள் மாசடைந்து விடுவாரா? புனிதம் கெட்டுவிடுமா?” - சீமான்

”லட்டுவில் என்ன சனாதனம் வருகிறது. லட்டு பிரச்னையில் ஒப்பந்தம் யாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது, கலந்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து இனிமேல் இப்படி நடைபெறாதபடி வேறு ஒருவருக்கு ஒப்பந்தத்தைக் கொடுங்கள். இவ்வளவு தானே” - சீமான்
திருப்பதி லட்டு, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்
திருப்பதி லட்டு, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்pt web
Published on

போராளி திலீபனின் 37 ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக நடந்த நிகழ்வில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். நிகழ்வில் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்விற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என முழக்கத்தை முன்வைத்தது இன்று அல்ல. ஆரம்பத்திலேயே வைத்திருக்கிறார். இதனை பொதுவான கோரிக்கையாக பார்க்க வேண்டும்.

கள்ளச்சந்தையில் மது விற்பது, அதிக விலைக்கு விற்பது, நேரம் கடந்து விற்பது இதெல்லாம் தியாகத்தில் வருகிறது. அதிமுக ஆட்சியில் திமுக போட்ட வழக்கில்தான் செந்தில்பாலாஜி உள்ளே சென்றுவிட்டு வந்திருக்கிறார். உங்கள் கட்சியில் இருந்தால் அது வீரதீர செயல், மற்ற கட்சிகளில் இருந்தால் அது ஊழல் குற்றச்சாட்டா?

திருப்பதி லட்டு, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்
கொட்டுக்காளி | மெய்யழகன் | டிமாண்டி காலனி 2 | ஹிட்லர் | இந்த வார ஓடிடி, தியேட்டர் ரிலீஸ் லிஸ்ட் இதோ!

லட்டுவில் என்ன சனாதனம் வருகிறது. லட்டு பிரச்னையில் ஒப்பந்தம் யாரிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது, கலந்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து இனிமேல் இப்படி நடைபெறாதபடி வேறு ஒருவருக்கு ஒப்பந்தத்தைக் கொடுங்கள். இவ்வளவு தானே. லட்டு உருட்டுவதை விட இவர்கள் உருட்டியதது தான் பெரிய உருட்டு இந்திய முழுமைக்கும் பெரிய உருட்டு.

திருப்பதி லட்டு, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்
திருப்பதி லட்டு, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்pt web

நீங்கள் பெருமாளை மதிக்கிறீர்களா இல்லை கேவலப்படுத்துகிறீர்களா? ஒரு லட்டுக்காக பெருமாள் மாசடைந்து விடுவாரா? புனிதம் கெட்டுவிடுமா? உங்களது அரசியலுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? சாதி, மதம், சாமியை வைத்து அரசியல் செய்து சிந்திப்பவன் மக்களை பற்றி சிந்திக்க மாட்டான்” எனத் தெரிவித்தார்.

திருப்பதி லட்டு, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்
மதுரை|மனைவியுடன் ஏற்பட்ட தகராறு - 2 பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு விபரீத முடிவெடுக்க முயன்ற நபர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com