அரியலூர்: வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்கள்

அரியலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் மற்றும் 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் திருட்டு
பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் திருட்டுpt desk
Published on

செய்தியாளர்: வெ.செந்தில்குமார்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே பெரியாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர், கடந்த மாதம் புதிதாக வீடு கட்டி அதில் குடியேறியுள்ளார். இந்நிலையில் நேற்று லட்சுமணனின் அம்மாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரை திருச்சியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.

பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் திருட்டு
பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் திருட்டுpt desk

சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பிரோவில் இருந்த 40 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

பூட்டை உடைத்து 40 சவரன் நகைகள் திருட்டு
கம்பம் டூ கேரளா: கஞ்சா கடத்த முயன்றதாக 4 பேர் கைது – 12 கிலோ கஞ்சா பறிமுதல்

இது குறித்து லட்சுமணன் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்க வந்த செந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com