தமிழகத்தில் பராமரிப்பு பணிகளுக்கான மின்சார ’ஷட் டவுன்’ நேரம் குறைப்பு

தமிழகத்தில் பராமரிப்பு பணிகளுக்கான மின்சார ’ஷட் டவுன்’ நேரம் குறைப்பு
தமிழகத்தில் பராமரிப்பு பணிகளுக்கான மின்சார ’ஷட் டவுன்’ நேரம் குறைப்பு
Published on

தமிழகத்தில் பராமரிப்புப் பணிக்கான மின்சார சேவை நிறுத்தம் செய்யப்படும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்திருக்கிறது.

வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும். தற்போது அந்த நேரம், 2 மணிநேரம் மட்டுமே என குறைக்கப்பட்டுள்ளது. பகல் 12 மணிக்குள் ஏதாவது இரண்டு மணிநேரம் பராமரிப்புப் பணிக்கு மின்சாரம் நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தே பணி மற்றும் வகுப்புகள் நடப்பதைக் கருதி மின்நிறுத்த நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com