திருவாரூரில் நடைபெற்ற நவீன சுயம்வரம்: வரன் தேடி வரிசையில் காத்திருந்த ஆண்கள்

திருவாரூரில் நடைபெற்ற நவீன சுயம்வரம்: வரன் தேடி வரிசையில் காத்திருந்த ஆண்கள்
திருவாரூரில் நடைபெற்ற நவீன சுயம்வரம்: வரன் தேடி வரிசையில் காத்திருந்த ஆண்கள்
Published on

கணவனை இழந்த பெண்கள் மற்றும் மனைவியை இழந்த ஆண்கள் பங்கேற்ற சுயம்வரம் நிகழ்ச்சி திருவாரூரில் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் விளமலில் தனியார் தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் ஏராளமான கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விவாகரத்தான பெண்கள், அதேபோல விவாகரத்தான ஆண்கள், மனைவியை இழந்த ஆண்கள், என 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தங்களுக்கு பொருத்தமான இணையை தேர்வு செய்தார்கள்.

வரன் தேடிவந்து முன்பதிவு செய்தவர்களை அறிமுக செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அவர்களைப் பற்றி அவர்களே பேசினார்கள். தங்களுக்கு எப்படிப்பட்ட வரன் வேண்டும். என்ன எதிர்பார்ப்பு உள்ளிட்டவை குறித்து ஆண்கள் பெண்கள் இருவரும் தங்களுடைய சுய குறிப்புகளை மேடையில் கூறினார்கள்

பெண்கள் குறைவாகவே வந்திருந்த நிலையில், பெண்களின் பெற்றோர்கள் மேடைக்கு வந்து தங்கள் பெண்ணுக்குத் தேவையான வரனை தேடினார்கள் ஒருசில பெண்கள் தாங்களாகவே அங்கு வந்து தனக்குத் தேவையான வரனை தேர்வு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில், கோயம்புத்தூர், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்டோர் இந்த சுயம்வர நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com