“ஆளுநர் கருத்துகளுக்கு பதிலடி கொடுப்பதில் இருந்து முதல்வர் பின்வாங்க மாட்டார்” - அமைச்சர் சேகர்பாபு

ஆளுநர் கருத்துகளுக்கு, பதிலடி கொடுப்பதில் இருந்து முதல்வர் பின்வாங்க மாட்டார், ஆளுநரின் பேச்சு அன்றோடு போச்சு என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் - அமைச்சர் சேகர்பாபு - ஆர்.என்.ரவி
மு.க.ஸ்டாலின் - அமைச்சர் சேகர்பாபு - ஆர்.என்.ரவிபுதிய தலைமுறை
Published on

செய்தியாளர்: சுரேஷ்குமார்

சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் திருக்கோயிலில் புதிய வெள்ளி திருத்தேர் அமைக்கும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியபோது....

அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
அமைச்சர் சேகர்பாபு ஆய்வு pt desk

“நீதிமன்ற பாராட்டுகளை பெறும் துறையாக இந்து சமய அறநிலையத் துறை உள்ளது”

“காளிகாம்பாள் திருக்கோயிலில் உள்ள தேரில் வெள்ளித் தகடு பொருத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரும். உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டும் அனைத்து பணிகளையும் விரைவுப்படுத்தி செயலாக்கத்துக்கு கொண்டு வந்து நீதிமன்ற பாராட்டுகளை பெறும் துறையாக இந்து சமய அறநிலையத் துறை உள்ளது.

மு.க.ஸ்டாலின் - அமைச்சர் சேகர்பாபு - ஆர்.என்.ரவி
மாநில அந்தஸ்தை கோரும் உமர் அப்துல்லா.. கடுமையாக சாடும் எதிர்க்கட்சிகள்.. காரணம் என்ன?

“தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகு சிதம்பரம் கோவிலில் பல தவறுகள் நடந்திருக்கின்றன”

கடந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு வருகை தந்தார்கள், இந்த ஆண்டு 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வருவார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும். சிதம்பரம் கோவில், தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் வந்தபிறகு பல தவறுகள் நடந்திருக்கின்றன. அனுமதி இல்லாமல் பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதையெல்லாம் நீதிமன்றம் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம்.

அமைச்சர் சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபுpt desk

“ஆளுநர் பேச்சு அன்றோடு போச்சு”

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, தினம் தினம் ஏதேனும் ஒரு வகையில் பரபரப்பை உண்டாக்க வேண்டும், தன்னை நோக்கி ஊடகங்கள் வர வேண்டும் என்ற நினைப்பில் பல செயல்களை செய்து கொண்டிருக்கிறார் ஆளுநர். அவரின் கருத்துகளுக்கு, பதிலடி கொடுப்பதில் தமிழ்நாடு முதலமைச்சர் பின்வாங்க மாட்டார். அதற்கு உண்டான நடவடிக்கைகளிலும் தமிழ்நாடு முதலமைச்சர் உறுதியாக இருப்பார். ஆளுநர் பேச்சு அன்றோடு போச்சு” என்று தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் - அமைச்சர் சேகர்பாபு - ஆர்.என்.ரவி
“பதவியை தொடர வேண்டுமென நினைத்தால்...” ஆளுநரின் பதிலுக்கு முதலமைச்சரின் எதிர்வினை..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com