குற்றஞ்சாட்டிய அறப்போர் இயக்கம்; வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய அமைச்சர் ராஜகண்ணப்பன்! என்ன நடந்தது?

அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக தன் மீது குற்றஞ்சாட்டிய அறப்போர் இயக்கத்திற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
 அமைச்சர் ராஜகண்ணப்பன்
அமைச்சர் ராஜகண்ணப்பன்முகநூல்
Published on

அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக தன் மீது குற்றஞ்சாட்டிய அறப்போர் இயக்கத்திற்கு அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னையில் 411 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நிலத்தை அமைச்சர் ராஜ கண்ணப்பனும் அவரது மகன்களும் ஆக்கிரமித்து அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கத்தினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், “1991-96 கால கட்டத்தில் ராஜ கண்ணப்பன் அமைச்சராக இருந்தபோது, அரசு நிலம் அபகரிக்கப்பட்டிருப்பது. அவர் மீதும் அவரது மகன்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து, நிலத்தை மீட்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

 அமைச்சர் ராஜகண்ணப்பன்
நெருங்கும் தீபாவளி பண்டிகை: உளுந்தூர்பேட்டை வாரச் சந்தையில் ரூ 2 கோடிக்கு மேல் விற்பனையான ஆடுகள்!

இந்நிலையில், தற்போது அமைச்சர் ராஜகண்ணப்பன், தனது வழக்கறிஞர் மூலம் அறப்போர் இயக்கத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில்,

காழ்ப்புணர்ச்சி காரணமாக, நீதிமன்ற உத்தரவுகளை மறைத்து அவதூறான செய்திகளை தெரிவித்ததற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மான நஷ்ட வழக்கு தொடர்வதுடன், தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சரின் வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com