மைக்ரோ பைனான்ஸ் வங்கிகளிடம் சிக்கித்தவிக்கும் குடும்பத்தலைவிகள் - கண்டுகொள்ளுமா அரசு?

மைக்ரோ பைனான்ஸ் வங்கிகளிடம் சிக்கித்தவிக்கும் குடும்பத்தலைவிகள் - கண்டுகொள்ளுமா அரசு?
மைக்ரோ பைனான்ஸ் வங்கிகளிடம் சிக்கித்தவிக்கும் குடும்பத்தலைவிகள் - கண்டுகொள்ளுமா அரசு?
Published on

மகளிர் சுய உதவிக்குழுக்களில் விரைவாக கடன் கிடைக்காத காரணத்தால் குடும்பத்தலைவிகள் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களிடம் கடன் வாங்குகின்றனர். ஆனால் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்களில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது என்றும், இந்த சிக்கல்கள் பற்றி மாவட்ட  ஆட்சியர்களிடம் முறையிட்டும் பலனில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர் சமூக செயற்பாட்டாளர்கள்.

 “தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் வேளாண் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் கிராமப்புற பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களிடம் பணபுழக்கமின்றி முடங்கியுள்ளனர்.

மளிகைக்கடைகள், வணிக நிறுவனங்களும் வியாபாரமின்றி பறிதவிக்கின்றனர். இந்நிலையில் 20 பேர் கொண்ட மகளிர் குழுக்களிடம் பல்வேறு தனியார் நிதி நிறுவனங்கள் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் குழுக் கடன்கள் வழங்கி உள்ளனர். அவ்வாறு கடன் பெற்றவர்கள் கொரொனோ பேரிடரால் வருமானம் இன்றி தவிப்பதால் திரும்ப செலுத்த முடியவில்லை. இதனால் கடன் வசூல் என்ற பெயரில் குடும்ப பெண்களை மிரட்டும் நடவடிக்கையில் நிதி நிறுவனங்கள் கிராமப்புறங்களில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் பல்வேறு முறைகேடுகளிலும் நிதி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகம் முழுவதும் பல்லாயிரம் குடும்பங்கள் சொல்லொணா துயரில் மூழ்கியுள்ளது. 

எனவே தமிழக அரசு மாவட்டம் தோறும் சிறப்பு விசாரணைக் குழுக்கள் அமைத்து, ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறும் நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கந்து வட்டி போன்ற இக்கொடுமையிலிருந்து கிராமப்புற பெண்களை பாதுகாத்திட வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் விரைவாகவும், எளிதாகவும் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்கிறார் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com