சென்னை மருத்துவ மாணவர் தற்கொலை: விடுதி அறையில் விபரீத முடிவு

சென்னை மருத்துவ மாணவர் தற்கொலை: விடுதி அறையில் விபரீத முடிவு
சென்னை மருத்துவ மாணவர் தற்கொலை: விடுதி அறையில் விபரீத முடிவு
Published on

சென்னையில் விடுதியில் மருத்துவக்கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் அருண்செல்வன். சென்னை மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள மருத்துவக்கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

நேற்றிரவு அருண்செல்வன் தங்கி இருந்த அறையான 403 தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அருகில் உள்ள அறையில் தங்கியிருந்த சக மாணவர்கள் இதனை கண்டு அதிர்ச்சிடைந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அருண்செல்வன் இறந்து போனார். பிரேதப் பரிசோதனைக்காக உடல் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை போலீசார் மருத்துவக்கல்லூரி விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். சக மாணவர்கள், நண்பர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com