அழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து

அழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து
அழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி - காட்டுப்பாதையில் காத்திருந்த ஆபத்து
Published on

மதுரையில் உள்ள அழகர்கோயிலுக்கு நண்பரோடு சென்ற சிறுமி, வழிப்பறியில் ஈடுபட்டவரால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மதுரையிலுள்ள அழகர்கோயில் மலை மீதிருக்கும் கோயிலுக்குச் செல்வதற்கு, தார் சாலையும், ஒத்தையடிப் பாதையும் உள்ளது. ஒத்தையடிப்பாதை அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்வதால், அந்த வழியை குறைவான நபர்களே பயன்படுத்துவார்கள். அப்படி நண்பருடன் காட்டுப்பாதையில் சென்ற போது நடந்த ஒரு கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்டிருக்கிறார், 17 வயது சிறுமி ஒருவர். 

மதுரையைச் சேர்ந்த இளைஞருடன் அழகர்கோயிலுக்கு சென்றிருக்கிறார் அந்த சிறுமி. இயற்கை அழகை ரசிக்க விரும்பிய இருவரும், ஆள்நடமாட்டம் இல்லாத ஒத்தையடிப்பாதை வழியாக நடந்து சென்றிருக்கிறார்கள். அந்தச் சமயம் அவர்களை ஒருவர் பின் தொடர்ந்து வருவதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அப்போது, புதருக்குள் மறைந்திருந்த நபர், திடீரென குறுக்கே பாய்ந்து அந்த ஜோடியை வழிமறித்திருக்கிறார். கையில் கத்தியும், கண்களில் கொலை வெறியுமாய் ஒருவர் எதிரோ நிற்கும்போது, அந்த இளைஞருக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. 

உதவிக்கு யாரும் இல்லாததை சாகதமாகப் பயன்படுத்திக்கொண்ட வழிப்பறிக் கொள்ளையன், இருவரிடம் இருந்த செல்ஃபோன், பணம், நகைகளை மிரட்டி பிடுங்கியிருக்கிறார். அதோடு அவர் விட்டுவிடவில்லை. அந்த இளைஞரை அடித்து விரட்டிவிட்டு, சிறுமியை காட்டிற்குள் தூக்கி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்த தகவலறிந்து சென்ற காவல்துறையினர், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு உடனடியாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில், மலைப்பகுதியில் பதுங்கியிருந்த அந்த நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் மேலூரைச் சேர்ந்த தர்ஷன் என்பது தெரியவந்ததது. இதனைத் தொடர்ந்து அவர்மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். 

கடந்த 3 மாதத்தில் மட்டும் இப்பகுதியில் 7 வழிபறி சம்பவங்கள் நடந்துள்ளன. நடந்த கொடுமையை வெளியே சொன்னால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டுவிடும் என நினைத்து, பெரும்பாலான காதல் ஜோடிகள் வழிப்பறி குறித்து புகார் கொடுப்பதே இல்லை. அது கொள்ளையர்களுக்கு சாதகமாகிவிடுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com