மனைவியால் மன உளைச்சல்: இரு குழந்தைகளுடன் கணவர் தற்கொலை..!

மனைவியால் மன உளைச்சல்: இரு குழந்தைகளுடன் கணவர் தற்கொலை..!
மனைவியால் மன உளைச்சல்: இரு குழந்தைகளுடன் கணவர் தற்கொலை..!
Published on

மனைவியின் தகாத உறவை தாங்க முடியாத கணவர் தனது இரு குழந்தைகளுடன் சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவர் அதே ஊரில் தேநீர் கடை வைத்து நடத்தி வருவதோடு, பகுதிநேர வேலையாக பெட்ரோல் பங்கிலும் பணியாற்றி வருகிறார்.  இவருக்கு கீதா என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று கடையில் இருந்த சிலிண்டர் வெடித்து கருப்பையா மற்றும் அவரது ஒரு மகள் பிரதீபா சம்பவ இடத்திலேயே, கருகிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர். அவரின் மற்றொரு மகள் ஹேமலதா படுகாயமடைந்தார்.

இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஹேமலதாவும் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. 

(ஆனந்த்)

கருப்பையாவின் மனைவி கீதாவிற்கும் அதே ஊரைச் சேர்ந்த ஆனந்த் என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதாகவும், இருவரும் பல நேரங்களில் தனிமையில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இந்த சம்பவம் அறிந்த கருப்பையா மனைவியிடம் இது குறித்து கேட்ட போது தகராறில் ஈடுபட்டு கீதா தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த கருப்பையா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். 

தனக்கு பின் தமது இரு குழந்தைகளையும் மனைவி விட்டுவிட்டு சென்றுவிட்டால் அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என பயந்துள்ளார் கருப்பையா. இதனால் மகள்கள் படித்த பள்ளிக்கு மதிய வேலையில் சென்று அவர்களை அழைத்து வந்துள்ளார். பின்னர் கடையில் இருந்த சிலிண்டர்களை திறந்து வைத்து விட்டு தீயை பற்ற வைத்து வெடிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com