கணவனை பிரிந்து வாழ்ந்த பெண் கொன்று புதைப்பு - காதலன் கைது 

கணவனை பிரிந்து வாழ்ந்த பெண் கொன்று புதைப்பு - காதலன் கைது 
கணவனை பிரிந்து வாழ்ந்த பெண் கொன்று புதைப்பு - காதலன் கைது 
Published on

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே 40 வயது மதிக்கத்தக்க பெண்ணை கொலை செய்து, கண்மாயில் புதைத்தவரை போலீஸார் கைது செய்தனர். 

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சீர்தாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் அருள். இவரது மனைவி அமலசெல்வி(40). இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், அமலசெல்விக்கு தேவகோட்டை சித்தனூர் சமத்துவபுரத்தை சேர்ந்த கண்ணன்(45) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அது காதலாக மாறியதாக தெரிகிறது. 

இந்நிலையில், கடந்த மாதம் 8ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அமலசெல்வி இரண்டு நாள்களாக வீடு திரும்பாததால் அவரின் உறவினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், கண்ணனிடம் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், கண்ணன் அமலசெல்வியை கொலை செய்து புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com