நிரம்பி வழிந்தது மதுராந்தகம் ஏரி

நிரம்பி வழிந்தது மதுராந்தகம் ஏரி
நிரம்பி வழிந்தது மதுராந்தகம் ஏரி
Published on

தமிழகத்தின் 2ஆவது பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நிரம்பியது. 

மதுராந்தகம் ஏரி தனது  முழுக்கொள்ளளவான 23 புள்ளி 2 அடி என்ற உயரத்தை எட்டியதை அடுத்து எந்நேரமும் தண்ணீர் திறந்து விடப்படலாம் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். ஏரியிலிருந்து கிளியாற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் என்பதால், 21 கிராமங்களுக்கு வெள்ள அபா‌ய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 250 கன அடி என்ற அளவிலேயே இருப்பதால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக ஏரியில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மதுராந்தகம் ஏரியிலிருந்து வெளியேறும் தண்ணீரை, அதன் கிளை ஏரிகளை நிரப்பும் பணியும் தொடங்கியுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com