மதுராந்தகம் ஏரி நிரம்பியது: குஷ்பு எச்சரிக்கை

மதுராந்தகம் ஏரி நிரம்பியது: குஷ்பு எச்சரிக்கை
மதுராந்தகம் ஏரி நிரம்பியது: குஷ்பு எச்சரிக்கை
Published on

மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதையொட்டி குஷ்பு எச்சரிகை விடுத்துள்ளார்.

இன்று மதுராந்தகம் ஏரி நிரம்பியதை தொடர்ந்து 21 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஏரியின் முழுக் கொள்ளளவான 23.5 அடியில் தற்போது நீர்மட்டம் 20.5 அடியை எட்டியுள்ளது.
 இந்த நிலையில் மதுராந்தகம் ஏரியில் உள்ள தண்ணீர் அவசர மதகுகள் மூலம் கிளியாற்றில் திறந்து விடப்பட உள்ளது. எனவே மக்கள் அனைவரும் தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள் என்று  நடிகையும் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com