மதுரை|மனைவியுடன் ஏற்பட்ட தகராறு - 2 பெண் குழந்தைகளை கொன்றுவிட்டு விபரீத முடிவெடுக்க முயன்ற நபர்!

மதுரையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு பெண் குழந்தைகளை கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற தந்தை - மனைவியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
madurai GH
madurai GH pt desk
Published on

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை மாநகர் யாகப்பா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேதுபதி. பெயிண்டராக வேலை பார்த்து வரும் இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், ரக்க்ஷிதா, ரக்ஷனா என இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், கணவன் - மனைவிக்கு இடையே கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மனைவி சில நாட்களாக கணவரிடம் சண்டை போட்டுவிட்டு உறவினர்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார்.

Murder case
Murder casept desk

இதையடுதது சேதுபதி, தனது மனைவி ராஜேஸ்வரியை தட்டச்சு மையத்தில் படிப்பதற்காக சேர்த்துள்ளார். இன்று காலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரு குழந்தைகளையும் கத்தியால் குத்தியும் கம்பியால் கழுத்தை நெரித்தும் கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதனிடையே வீட்டிற்கு வந்த ராஜேஸ்வரி கதவை திறந்து பார்த்தபோது, குழந்தைகள் கொலை செய்யப்பட்ட நிலையில், கணவர் தூக்கில் தொங்கியபடி இருந்ததைப் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

madurai GH
கர்நாடகா மகாலட்சுமி கொலை வழக்கு: போலீசார் சந்தேகித்திருந்த முக்கிய குற்றவாளி எடுத்த விபரீத முடிவு!

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர் இரு குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் தற்கொலைக்கு முயன்ற சேதுபதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இது தொடர்பாக ராஜேஸ்வரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com