மதுரை: உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ. 2.94 கோடி பறிமுதல்

மதுரை: உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ. 2.94 கோடி பறிமுதல்
மதுரை: உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ. 2.94 கோடி பறிமுதல்
Published on

மதுரையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டுவரப்பட்ட 2 கோடியே 94 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து நகை வியாபாரியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

மதுரை கரிமேடு காவல் நிலைய பகுதியில் நேற்று இரவு சந்தேகத்திற்கிடமான வகையில் காரிலிருந்து இறங்கி சென்றவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பதும். அவர் நகைக்கடை உரிமையாளர் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரை சோதனை செய்தபோது அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் 2 கோடியே 94 லட்சம் ரூபாய் பணம் இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக வருமானவரித் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது கரிமேடு காவல் நிலையத்தில் விக்னேஷ்வரனிரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com