”மது குடிக்காதீர்.. சிகரெட் பிடிக்காதீர்.. பிரியாணி சாப்பிடாதீர்.. சைவமாக மாறுங்கள்” – மதுரை ஆதீனம்!

யாரும் மது குடிக்காதீர்கள், சிகரெட் பிடிக்காதீர்கள், பிரியாணி சாப்பிடாதீர்கள், சைவமாக மாறுங்கள் என்று மதுரை ஆதீனம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்pt desk
Published on

செய்தியாளர்: காளிராஜன்.த்

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே இந்து மக்கள் கட்சி சார்பாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் மதுரை ஆதீனம் "ஸ்ரீ ல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமி" கலந்து கொண்டார். இதையடுத்து திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்து துவங்கிய விநாயகர் சிலை ஊர்வலம் நான்கு முக்கிய வீதிகள் வழியாக கோட்டைகுளத்தை அடைந்து அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

மதுரை ஆதீனம்
மதுரை ஆதீனம்pt desk

”மக்களும் பைசா கொடுத்தால் ஓட்டு போட்டு விடுவார்கள்”

இந்த விழாவில் மதுரை ஆதீனம் பேசிய போது.. "இந்தியாவில் தமிழகத்தில் குறிப்பாக திண்டுக்கல்லில் பிறப்பது புண்ணியம். 20 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலையை வைக்க நான் வந்தேன். அபிராமி அம்மன் சிலை வைப்பது உங்கள் கையில் தான் உள்ளது. அதற்கு மேல் நான் சொல்ல மாட்டேன். அதைச் சொன்னார் இதை சொன்னார் என்று என்னை ஆட்டைய போட்டு விடுவார்கள். நம்ம மக்களும் பைசா கொடுத்தால் நைசாக ஓட்டு போட்டு விடுவார்கள். திருந்த மாட்டார்கள். சீமானும் அதைத்தான் சொல்கிறார்.

மதுரை ஆதீனம்
தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் | 21 தங்கம் வென்று இந்தியா முதலிடம்! 2 தங்கம் வென்ற தமிழ்மகள்!

”படித்த இளைஞர் நடுரோட்டில் குடித்துக் கிடைக்கிறார்கள்”

பழனி மாநாடுக்கு சென்றதும் இரண்டு கோரிக்கைகளை வைத்தேன். மதுவை நிறுத்துங்கள், சிகரெட்டை நிறுத்துங்கள். டாஸ்மாக் கடைக்கு பொதுமக்கள் யாரும் போகாதீர்கள். நீங்கள் போவதால்தான் அவர்கள் கடையை திறக்கிறார்கள். அரசாங்கத்தை நான் குறைசொல்ல மாட்டேன். அவர்களுக்கு வருமானம் தேவை அதனால் டாஸ்மாக்கை திறந்து வைக்கிறார்கள். காமராஜர் படிக்கச் சொன்னார்.. நான் அவ்வளவுதான் சொல்வேன். (ஒன்று என்றால் இரண்டு என்று கூறி விடுவார்கள்). படித்த இளைஞர் நடுரோட்டில் குடித்துக் கிடைக்கிறார்கள். அவரை காப்பாற்ற வேண்டும் என தோன்றுகிறது. அரசாங்கத்தை நான் குறைசொல்ல மாட்டேன். மாமிசம் சாப்பிடாதீர்கள். சைவமாக மாறுங்கள்.

minister sekar babu
minister sekar babupt desk

”எதிர்ப்பை மீறி மாநாடு நடத்துகிறார்கள் என்றால் நம்மை நெருங்குகிறார்கள்”

எத்தனையோ அமைச்சர்களை நான் பார்த்துள்ளேன். ஆனால், பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டில் தி.மு.க., அமைச்சர் சேகர்பாபு காவி வேஷ்டி கட்டி வந்தது நமக்கு வெற்றி தான். என்னுடைய பழைய பெயர் பகவதி பாபு. அவருடைய பெயர் சேகர்பாபு. இருவரும் ஏன் சேர்ந்தோம் குத்தகை கொடுக்காதவர்களுக்கு ஆப்பு வைக்க - காப்பு கட்ட சேர்ந்துள்ளோம். சுயநலம் காரணமாகவே சேகர்பாபு உடன் சேர்ந்துள்ளேன். கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் திருமாவளவன் மற்றும் தி.க ஆகிய கட்சிகளின் எதிர்ப்பை மீறி மாநாடு நடத்துகிறார்கள் என்றால் நம்மை நெருங்குகிறார்கள் என்று அர்த்தம்.

மதுரை ஆதீனம்
ஜிஎஸ்டி| ’அன்னபூர்ணா உரிமையாளரின் Cream Bun பேச்சு’ முதல் ’அண்ணாமலையின் மன்னிப்பு’ வரை.. முழு விவரம்

”பிரியாணி சாப்பிடாதீர்கள்.. சைவமாக மாறுங்கள்”

மக்கள் கையில்தான் எல்லாம் உள்ளது. அரசாங்கத்தை நேராக எதிர்க்கக் கூடாது. அனைவரும் ஒற்றுமையாக இருங்கள். யாரும் மது குடிக்காதீர்கள், சிகரெட் பிடிக்காதீர்கள், பிரியாணி சாப்பிடாதீர்கள் சைவமாக மாறுங்கள். தி.மு.க., அரசு வள்ளலார் நிகழ்ச்சியை நடத்தியது பெரிய விஷயம். அதேபோல் முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தியதும் பெரிய விஷயம் தான்.

சமீபத்தில் விருதுநகரில் காவல் பெண் அதிகாரி ஒருவரை நபர் ஒருவர் தாக்கியதை பார்த்து மனம் வேதனை அடைந்தேன். காவல்துறையை பாதுகாக்க வேண்டும். காவல்துறையை யாரும் திட்டக்கூடாது. தமிழக காவல்துறையை போல் உலகில் எங்கும் இல்லை. தமிழக அரசிடம் மோதலாக செல்லாமல் காதலாக செல்வோம்" என்று மதுரை ஆதீனம் பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com