பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் - மனுஸ்மிருதி விவகாரத்தில் நீதிமன்றம்.!

பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் - மனுஸ்மிருதி விவகாரத்தில் நீதிமன்றம்.!
பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் - மனுஸ்மிருதி விவகாரத்தில் நீதிமன்றம்.!
Published on

மனுஸ்மிருதி பற்றி அவதூறாக பேசியதாக திருமாவளவனுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

மனுஸ்மிருதி பற்றி அவதூறாக பேசியதாக திருமாவளவனுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணையின்போது உரிய சட்டப்பிரிவுகளை குறிப்பிட்டு புதிய வழக்காக தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதால் வழக்கு வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து வழக்கறிஞர் காசிராமலிங்கம் தாக்கல் செய்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கு விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். அரசியல் பிரச்னைகளுக்கு தீர்வு காண நீதிமன்றத்தை பயன்படுத்தக்கூடாது. மனுஸ்மிருதி சட்ட புத்தகம் அல்ல. மொழிபெயர்ப்பு சரியா எனவும் தெரியவில்லை எனக் குறிப்பிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com