மலையிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி: உயிர் தப்பிய காதல் ஜோடி

மலையிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி: உயிர் தப்பிய காதல் ஜோடி
மலையிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி: உயிர் தப்பிய காதல் ஜோடி
Published on

திருவண்ணாமலை மாவட்டத்தில் மலையிலிருந்து குதித்து காதல் ஜோடி தற்கொலைக்கு முயன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. 

ஆம்பூரைச் சேர்ந்த நீலம்பாரி, புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் ஆகியோர் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இதனால் விரக்தி அடைந்த காதல் ஜோடி, திருவண்ணாமலை மாவட்டம் போளுர் சப்தகிரி மலை மீது ஏறி, அதன் உச்சியிலிருந்த குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளனர். 

எனினும், இருவரும் பாறைகளில் சிக்கி சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். அங்கிருந்த பொதுமக்கள் அவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அங்கிருந்தவர்கள் அவர்கள் குதிக்கும் காட்சிகளை தங்களது செல்போனில் பதிவு செய்துள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com