வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை

வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை

வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி கத்தியால் குத்திக்கொலை
Published on

விருத்தாச்சலம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கீழ்பவளங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் கருவேப்பிலங்குறிச்சி என்ற பகுதியில் வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரும், இவரின் மனைவியும் தினந்தோறும் கூலி வேலைக்கு சென்றுவிடுவார்கள். இவரது மகள் திலகவதி விருத்தாசலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மாணவி இன்று கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். 

வீட்டில் தனியாக இருந்த அவர், மாலை 5.30 மணியளவில் உறவினர் ஒருவருக்கு போன் செய்து, தன்னை யரோ கத்தியால் குத்திவிட்டதாக கூறி உதவிகேட்டு கதறியுள்ளார். இதனால் பதறிப்போய் அவரது வீட்டிற்கு ஓடிவந்த உறவினர் கஜேந்திரன் என்பவர், கத்தியால் குத்தப்பட்டு மயக்க நிலையில் இருந்த மாணவியை விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com