டாஸ்மாக்கில் ஒரே நாளில் ரூ.164.87 கோடிக்கு மது விற்பனை

டாஸ்மாக்கில் ஒரே நாளில் ரூ.164.87 கோடிக்கு மது விற்பனை
டாஸ்மாக்கில் ஒரே நாளில் ரூ.164.87 கோடிக்கு மது விற்பனை
Published on

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் திறக்கப்பட்ட ஒரே நாளில் ரூ.164.87 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்றே குறைந்துள்ளதை அடுத்து மாநிலத்தில் தொற்று பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்டன. இதனால் காலை முதலே டாஸ்மாக் கடைகளை தேனீக்கள்போல் மொய்த்த மது குடிப்போர், நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

நேற்று மட்டும் ரூ.164.87 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது. அதிபட்சமாக மதுரை மாவட்டத்தில் ரூ.49.54 கோடி, சென்னை மண்டலத்தில் 42.96 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன. சேலம் மண்டலத்தில் 38.72 கோடிக்கும் திருச்சி மண்டலத்தில் ரூ.33.65 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com