பெரியபாளையம் அருகே ஏரி உடைந்தது: அச்சத்தில் கிராம மக்கள்

பெரியபாளையம் அருகே ஏரி உடைந்தது: அச்சத்தில் கிராம மக்கள்
பெரியபாளையம் அருகே ஏரி உடைந்தது: அச்சத்தில் கிராம மக்கள்
Published on

திருவள்‌ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே ஏரி உடைந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் முக்கரம்பாக்கத்தில் 800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியின் மதகுகளுக்கு அருகே திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்து வெளியேறும் நீர் அங்குள்ள விவசாய நிலங்களில் புகுந்து வருகிறது. இதன் காரணமாக ஏராளமான ஏக்கர் விளை நிலங்கள் தண்ணீரில் மூழ்கி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். ஏரியின் உடைப்பு அதிகமாகும் பட்சத்தில், முக்கரம்பாக்கம் கிராமத்திற்குள்ளும் தண்ணீர் புகு‌ம் அபாயம் ‌ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், மணல் ‌மூட்டைகள் கொண்டு உடைப்பை அடைக்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஏரி உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com