"நாங்கள் பிச்சை எடுத்து நிதி கொடுத்தால்.."- கூண்டோடு வெளியேறும் கிருஷ்ணகிரி மாவட்ட நாதக நிர்வாகிகள்!

கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு சீமானுக்கு எதிராக போர் கொடி. சீமான் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டு
சீமான், கரு.பிரபாகரன்
சீமான், கரு.பிரபாகரன்pt web
Published on

செய்தியாளர் ஜி.பழனிவேல்

நாதக செயல்பாடுகள் சரியில்லை

கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக மண்டல செயலாளர் கரு.பிரபாகரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் கட்சியில் இருந்து விலக இருப்பது குறித்தும் பிரபாகரன் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “14 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் இருக்கிறோம். ஈழ மக்களை காப்பாற்ற கட்சியை ஆரம்பித்தோம். தற்போது தமிழ் நாட்டு மக்களின் பிரச்னைக்காக நிற்கிறோம். அதற்காக பல்வேறு வழக்குகளை சந்தித்து சிறைக்கு சென்று உள்ளோம்.

கிருஷ்ணகிரி மண்டலத்தில் 20,000 பேரை உறுப்பினர்களாக இணைத்து 1 லட்சம் வாக்குகளை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாங்கியுள்ளோம். கட்சி ஆரம்பித்த பொழுது இருந்த பல மாநில பொறுப்பாளர்கள் தற்போது கட்சியில் இல்லை. தமிழகத்தில் 3வது பெரிய கட்சியாக வளர்ந்த பிறகு தற்போது செயல்பாடுகள் சரி இல்லை.

சீமான், கரு.பிரபாகரன்
மும்பை | கையில் இருந்து தவறி விழுந்த துப்பாக்கி; நடிகரின் காலில் பாய்ந்த குண்டு! நடந்தது என்ன?

யாரும் வளரக் கூடாது என சீமான் நினைக்கிறார்

யாருக்கும் அங்கிகாரம் கிடைக்க கூடாது என உழைத்தவர்கள் ஓரம் கட்டப்படுகிறார்கள். தமிழகத்தில் எந்த பொறுப்பாளரையும் அழைத்து சீமான் ஆலோசனை நடத்தவில்லை. 14 ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தவர்களுக்கு தங்கள் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தெரியாதா? தமிழகம் முழுவதும் பழைய ஆட்கள் நிராகரிக்கப்படுவதன் காரணம் என்ன? எங்கள் இளமை காலம் முழுவதும் கட்சி உழைப்பில் போய்விட்டது.

மாற்று கட்சியில் உள்ள எங்கள் உறவினர்களது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டால் நடவடிக்கை எடுக்கிறீர்கள். ஆனால் சீமான் மட்டும் அனைத்து கட்சியினர் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். நாங்கள் பிச்சை எடுத்து கட்சிக்கு நிதி கொடுத்தால் கட்சியை பாக்யராஜ் என்ற தனி நபர் பெயரில் பதிவு செய்து உள்ளீர்கள்.

நாம் தமிழர் கட்சியில் யாரும் வளர கூடாது என சீமான் நினைக்கிறார். சீமான் பணத்துக்கு விலை போய்விட்டார் என கருதுகிறோம். தனிப்பட்ட ஆதரவாளர்களை நாங்கள் திரட்டாமல் இருந்ததால் தற்போது எங்களை ஓரம் கட்ட முயற்சி செய்கின்றனர்.

சீமான், கரு.பிரபாகரன்
ரூ.1.5 லட்சம் விலையுள்ள ஐபோனை டெலிவரி செய்ய சென்ற ஊழியர் கொலை.. உ.பியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நாங்கள் கஷ்டப்படுகிறோம், சீமான் சொகுசாக வாழ்கிறார்

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு கட்சியில் கட்டுப்பாடு இல்லை. கட்சிக்காக உழைத்து சிறை சென்றவர்களை காப்பாற்ற என்ன செய்தார்கள். எளிமையான அரசியல் இல்லை. திமுக, அதிமுக மற்றும் பணக்காரர்கள் அழைத்தால் நிகழ்ச்சிகளுக்கு செல்லும் சீமான் நாம் தமிழர் கட்சினர் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வது இல்லை.

ட்விட்டர்

கட்சியில் இருந்து விலகிய முன்னணி பொறுப்பாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் கட்சியை கட்டமைத்தால் இணைந்து செயல்பட தயார். இல்லை என்றால் விலகியவர்களை ஒன்றிணைத்து புதிய தமிழ் தேசிய இயக்கம் அமைக்கப்படும்.

செயற்குழு கூட்டம், பொதுக்குழு கூட்டம் என்ற பெயரில் கையெழுத்து மட்டுமே வாங்கப்படுகிறது. நாங்கள் பிச்சை எடுத்து பொதுக்கூட்டங்கள் போராட்டங்கள் நடத்துகிறோம். ஆனால், மாதம் 2.5 லட்சம் வாடகை, 3க்கும் மேற்பட்ட கார்கள், 15 வேலை ஆட்கள் என சொகுசாக வாழ்கிறார்கள். ஆனால், ஒரு மண்டல செயலாளர் மனைவி ஏரி வேலைக்கு தான் சென்று கொண்டிருக்கிறார்கள்.

சீமான், கரு.பிரபாகரன்
உடலுறவுக்குப் பின் வெளியேறிய ரத்தப்போக்கு.. இணையத்தில் தகவல் தேடிய காதலர்.. காதலிக்கு நேர்ந்த சோகம்!

ஒரு எம்எல்ஏ கூட பெற முடியவில்லை

ஆந்திராவில் பவன் கல்யாண் கட்சி ஆரம்பித்த சில ஆண்டுகளில் கூட்டணிகளோடு ஆட்சி அமைத்தார். ஆனால் 14 ஆண்டுகளாக தனித்து போட்டியிட்டும் ஒரு எம்எல்ஏ கூட பெற முடியவில்லை. கூட்டணி வைத்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும் என சீமானுக்கும் தெரியும்.

இனி அடுத்த கட்ட நடவடிக்கையாக கட்சியில் இருந்து வெளியேறியவர்கள், நீக்கப்பட்டவர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தப்படும்” என தெரிவித்தார்.

இந்த பேட்டியின் போது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் காசிலிங்கம், கிருஷ்ணகிரி தொகுதி செயலாளர் திருமூர்த்தி, ஊத்தங்கரை தொகுதி செயலாளர் எழிலரசு, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் ஐயப்பன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் இர்பான், பர்கூர் தொகுதி செயலாளர் அப்துல் ரகுமான், காவேரிப்பட்டினம் ஒன்றிய செயலாளர் செல்வா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் உடன் இருந்தனர்.

சீமான், கரு.பிரபாகரன்
சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த SpaceX Crew-9... சுனிதா வில்லியம்ஸை சந்தித்தபின் மகிழ்ச்சி Video!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com