“எங்கே இருந்தாலும் தூக்குவேன்” - ரவுடிகளுக்கு காவல் உதவி ஆய்வாளர் எச்சரிக்கை

“எங்கே இருந்தாலும் தூக்குவேன்” - ரவுடிகளுக்கு காவல் உதவி ஆய்வாளர் எச்சரிக்கை
“எங்கே இருந்தாலும் தூக்குவேன்” - ரவுடிகளுக்கு காவல் உதவி ஆய்வாளர் எச்சரிக்கை
Published on

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா ரவுடிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் இசக்கி ராஜா. இவர் ரவுடிகளுக்கு எதிராக எச்சரிக்கை செய்து வெளியிட்ட ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த ஆடியோவில் அவர் பேசியிருப்பதாவது, “யாராவது குரூப் ஆரம்பிங்க அத்தனை பேரையும் தூக்குறேன். என்ன நினைச்சிட்டு இருக்கீங்க. பாய்க்கு காசு கொடுத்து தான் வெட்டத்தெரியும். சுயமாக எதுவும் செய்ய முடியாது. பாய்க்கு திறமை கிடையாது. உங்களையெல்லாம் காசு கொடுத்து தீவிரவாதி ஆக்கி வச்சிருக்காங்க. தெரியுமா உங்களுக்கு. மூளைச்சலவை செய்து சாராயம் வாங்கி கொடுத்து உங்களையெல்லாம் தீவிரவாதியாக்கி வைத்துள்ளார்கள். அந்தப் பாய் அப்துல் ரஹீம்கிட்ட சொல்லிடு. நான் கோவில்பட்டியில் இருக்கும்வரை கூலிப்படையை வச்சி அறுவா பிடிக்கணும்னு நெனைச்சா இசக்கி ராஜா என்ன பண்ணுவேன்னு தெரியாது. எங்கே இருந்தாலும் தூக்குவேன். யாராவது குரூப் ஆரம்பித்தால் தொலைச்சுருவேன்” என அந்த ஆடியோவில் இசக்கி ராஜா பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com