கிசான் திட்ட முறைகேடு: கனிமொழி கண்டனம்!

கிசான் திட்ட முறைகேடு: கனிமொழி கண்டனம்!
கிசான் திட்ட முறைகேடு: கனிமொழி கண்டனம்!
Published on

'5 லட்சம் போலி பயனாளிகள் கிஸான் மோசடியில் ஈடுபட்டிருப்பதென்பது, ஆளும் அதிமுக தலைவர்களின் உதவி இன்றி நடந்திருக்க முடியாது' என்று குற்றஞ்சாட்டி உள்ளார் கனிமொழி.

இதுதொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது: 

''பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் 110 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கொள்ளைகள் அனைத்தும் பொதுமுடக்க காலத்தில்தான் நடைபெற்றுள்ளன. வங்கிகளில் கடன் பெறுவதற்கு நாங்கள் உதவுகிறோம் என்று தமிழக பிஜேபி இணையதளம் தொடங்கியது இதற்காகத்தானா ?

5 லட்சம் போலி பயனாளிகள் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதென்பது, ஆளும் அதிமுக தலைவர்களின் உதவி இன்றி நடந்திருக்க முடியாது.''

இவ்வாறு கனிமொழி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com